Posts

Showing posts from January, 2023

நடராஜர் தன்னுடைய நடனத்தால் சிறப்பித்த ஐந்து திருத்தலங்கள்.

Image
  நடராஜர் தன்னுடைய நடனத்தால் சிறப்பித்த ஐந்து திருத்தலங்கள்.                 பஞ்ச சபைகள்’*என்றும், ‘ஐம்பெரும் சபைகள்’ என்றும் அழைக்கப்படுகின்றன.     1) சிதம்பரம், 2) மதுரை, 3) திருவாலங்காடு, 4) திருநெல்வேலி,  5) குற்றாலம், ஆகிய இந்த ஐந்து திருத்தலங்களும், முறையே பொற்சபை, வெள்ளிசபை, ரத்தின சபை, தாமிர சபை, சித்திர சபை, என்று வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.   மேற்கண்ட ஐந்து சபைகள் உள்ள திருத்தலங்களை சிறிய குறிப்பாக பார்க்கலாம்:-)               *வெள்ளி சபை   சிவபெருமானின் திருவிளையாடல்கள் பெரும்பாலும் நடைபெற்ற இடமாக மதுரை திருத்தலம் திகழ்கிறது.  மீனாட்சி அம்மனின் அரசாட்சியும், அருளாட்சியும் நிறைந்திருக்கும் மதுரையில்தான் மதுரை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த ஆலயம்தான் நடராஜரின் திருநடனம் கண்ட ‘வெள்ளி சபை’யாக திகழ்கிறது.  இதனை ‘வெள்ளியம்பலம்’, ‘வெள்ளி மன்றம்’ என்றும் அழைப்பார்கள். இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் நடராஜப் பெருமான், தன் பக்தனான பாண்டிய மன்னன...

சுப்பிரமணியசுவாமி, திருக்கோவில் குமாரவயலூர்,

Image
 அருள்மிகு வள்ளி தேவசேனா, ஆதிநாயகி சமேத சுப்பிரமணியசுவாமி, ஆதிநாதர் திருக்கோவில் குமாரவயலூர், திருச்சி மாவட்டம். சோழ வம்சத்தின் ஒரு மன்னன் நீண்ட நேரம் வேட்டையாடி தண்ணீரைத் தேடி இந்த இடத்திற்கு வந்ததாக புராணம் கூறுகிறது. கரும்பைக் கவனித்த சோழ மன்னன் அதிலிருந்து சாற்றைக் குடிக்க நினைத்தான். கரும்பை உடைக்க முயன்றபோது, ​​அதில் இருந்து ரத்தம் கசிவதைக் கண்டு மன்னன் திகைத்தான். இந்த மர்மமான சூழ்நிலையைப் பற்றி மேலும் அறிய முயற்சித்தபோது, ​​​​அவர் பூமியைத் தோண்டச் சென்று ஒரு சிவலிங்கத்தை (சிவலிங்கம்) கண்டார். ஆச்சரியத்துடன், சோழ மன்னன் அந்த இடத்திலேயே கோயில் கட்ட முடிவு செய்தார். இந்து புராணங்களின்படி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இருந்து புனித அருணகிரிநாதரை (15 ஆம் நூற்றாண்டின் தமிழ்க் கவிஞர் துறவி) முருகப்பெருமான் காப்பாற்றிய பிறகு, அவர் திருப்புகழ் முதல் சில பாடல்களான ' முத்தை தரு ' துறவிக்கு பரிசளித்தார். இந்த சில வசனங்களை இயற்றிய பிறகு, துறவி கவிஞர் மீண்டும் தியானத்தில் இறங்குகிறார். முருகப் பெருமான் அவரை வயலூருக்கு வரவழைத்து, திருப்புகழ் பாடுவார் என்று எதிர்பார்த்தார். துறவி...

ஆஞ்சநேயர் சூட்சும வடிவில் வீணை இசைக்கும் சிவாலயம்!

Image
  ஆஞ்சநேயர் சூட்சும வடிவில் வீணை இசைக்கும் சிவாலயம்! சென்னை பூந்தமல்லி - பேரம்பாக்கம் சாலையில், பூந்தமல்லியில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில். வீணை வாசிக்கும் ஆஞ்சநேயர், எலும்புப் பிணிகள் தீர்க்கும் பிரதோஷ தரிசனம், மூல நட்சத்திரக் காரர்கள் வழிபடவேண்டிய ஆலயம் என்று இந்தத் தலத்துக்கு சிறப்புகள் பல உண்டு. திருமால் மோகினி அவதாரம் எடுத்து வந்து அசுரர்களை மயக்கி, பாற்கடல் அமிர்தத்தைத் தேவர்களே அருந்தும்படி செய்த கதையை நாம் அறிவோம். இங்ஙனம் வஞ்சகமாக அசுரர்களை ஏமாற்றியதால், மோகினி வடிவத்தில் இருந்து தன் சுயவடிவுக்கு மாற மகாவிஷ்ணுவால் முடியவில்லை. எனவே, அவர் இத்தலத்துக்கு வந்து, சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டு, அதன் பயனாக சுய வடிவம் பெற்றார். `மால் பேடு' என்றும் (மால் திருமால்; பேடு பெண்), பெண் வடிவில் திருமால் வழிபட்டு, மெய் உருக் கொண்டதால் `மெய்ப்பேடு' என்றும் அழைக்கப்பெற்ற இத்தலம், தற்போது `மப்பேடு' என்று அழைக்கப்படுகிறது. திருவாலங்காட்டில் எம்பெருமான் ஈசன் திருநடனம் புரிந்த போது, அவரின் நந்தி கணங்களில் ஒருவரான சிங்கி, சிவனார...

Hayagrevar | ஹயக்ரீவர்

Image
 

மகாலட்சுமி வசிக்கும் 108 அபூர்வ இடங்கள்

Image
  மகாலட்சுமி வசிக்கும் 108 அபூர்வ இடங்கள் சித்த நூல்களில் மகாலட்சுமி வாசம் செய்யும் அபூர்வ 108 இடங்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளன. நாம் தொடர்ந்து இந்த பொருட்களை வைத்திருப்பதாலோ, அன்றாட நம் வாழ்வில் பயன்படுத்துவதாலோ, தொடுவதலோ அதிஷ்டத்துக்குரிய தேவதைகள், அதிஷ்டத்துக்குரிய சக்திகள் நம்மை ஈர்க்கும் என வேத நூல்கள் சொல்கின்றன. (1)வெற்றிலை மேற்புறம், (2)விபூதி, (3)வில்வம், (4)மஞ்சள், (5)அட்சதை, (6)பூரணகும்பம், (7)தாமரை, (8)தாமரைமணி, (9)ஜெபமாலை, (10)வலம்புரிச்சங்கு, (11)மாவிலை, (12)தர்ப்பை, (13)குலை வாழை, (14)துளசி, (15)தாழம்பூ, (16)ருத்ராட்சம், (17)சந்தனம், (18)தேவ தாரு, (19)அகில், (20)பஞ்சபாத்திரம், (21)கொப்பரைக்காய், (22)பாக்கு, (23)பச்சைக்கற்பூரம், (24)கலசம், (25)சிருக்சுருவம், (26)கமண்டலநீர், (27)நிறைகுடம், (28)காய்ச்சிய பால், (29)காராம்பசு நெய், (30)குங்கிலியப் புகை, (31)கஸ்தூரி, (32)புனுகு, (33)பூணூல், (34)சாளக்கிராமம், (35)பாணலிங்கம், (36)பஞ்ச கவ்யம், (37)திருமாங்கல்யம், (38)கிரீடம், (39)பூலாங்கிழங்கு, (40)ஆலவிழுது, (41)தேங்காய்க்கண், (42)தென்னம் பாளை, (43)சங்கு புஷ்பம், (44)இலந்தை, (4...

சுவாமி ஐயப்பன் வரலாறு பாகம் 11 AYAPPAN HISTORY PART - 11

Image
 சுவாமி ஐயப்பன் வரலாறு 11 *****************  மணிகண்டன் வருகை தருதல் :   ***************** மணிகண்டன் தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்பதை அறிந்த அடுத்த கணப் பொழுதே, தாய் இருந்த அறையை நோக்கி விரைந்து வந்து அவர்களுக்கு நடக்கும் சிகிச்சையை கண்டுக்கொண்டிருந்தார். பின், அறையின் வெளியே தந்தை மிகுந்த கவலை யுடன் இருப்பதை அறிந்த மணிகண்டன் அவர் அருகில் சென்றார்.  மணிகண்டனும், மகாராஜாவும் ஒன்றிணை ந்த அப்பொழுதே இச்செயலை எடுத்துரைக்க சரியானதாக அமையும் என்று முதலமைச்சர் வைத்தியரிடம் சில செய்கைகளை காட்ட வைத்தியரும் அங்கு கூடி நின்ற மூவருடன் சென்று மகாராணியின் உடல் நிலைகளைப் பற்றி எடுத்துரைக்க தொடங்கினார்.  வைத்தியர் எடுத்துரைத்தல் :  ***************** வைத்தியர் ஒருவரிடம் சென்று மகாராணிக்கு ஏற்பட்டுள்ள தலைவலி என்பது சாதாரண தலைவலி அல்ல. மிகவும் கடுமையான உயி ரைக்கொல்லும் வகையிலான தலைவலியா கும். இவ்விதமே விட்டுவிட்டால் மகாராணி விரைவில் நம்மைவிட்டு மறைந்து விடுவார் என்று கூறினார். இதைக் கேட்டதும் மகாராஜா என்ன செய்வது? என்று புரியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தார். ஆன...

நோய்கள் தீர்க்கும் சில திருத்தலங்கள்

Image
 நோய்கள் தீர்க்கும் சில திருத்தலங்கள் வைத்தீஸ்வரன் கோவில் இந்த ஆலயத்தில் உள்ள வைத்தியநாதரை  வணங்கி வழிபட தீராத நோய் தீரும். இத்தலம் செவ்வாய் பகவானின் தோல் நோய் தீர்த்த தலமாகும்.இங்கு வழங்கப்படும் திருச்சாந்துருண்டை பிரசாதம் பல நோய்களை குணமாக்கும். சங்கரன் கோவில் ராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ளது சங்கரன்கோவில். இங்கு தரப்படும் புற்றுமண் பிரசாதம் சகல சரும நோய்களையும்  குணமாக்கும். நாகதோஷத்தால் பாதிப்பு உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட நல்ல முன்னேற்றம் ஏற்படுவது கண்கூடு. திருச்செந்தூர் விசுவாமித்தரரின் காசநோயை முருகன் தீர்த்த தலம் இது ஆகும். இங்கு தரப்படும் பன்னீர் இலை திருநீற்றை பூசியும் வாயில் இட்டு கொள்வதும் நோய் தீரும். அதேபோல் ஆதிசங்கரரின் நோயையும் தீர்த்த தலம்  ஸ்ரீ முஷ்ணம் விருத்தாச்சலத்தில் அருகில் உள்ளது இங்குள்ள பூவராகசுவாமி கோவிலில் கொடுக்கப்படும் முஷ்தாபி சூரணம் தீராத நோய் தீர்க்கும் அருமருந்தாகும். பழனி இவ்வாலயத்தில் அதிகாலையில் தரப்படும் கபினி தீர்த்தம் மற்றும் சாற்றுச் சந்தனம் எந்த நோயையும் குணமாக்கும் ஆற்றல் படைத்தது சின்னபாபு சமுத்திரம் விழுப்புர...

வீட்டில் தீபம் ஏற்றுகையில் இந்த மந்திரத்தை கூறினால் அதிஷ்டம் நிச்சயம்

Image
வீட்டில் தீபம் ஏற்றுகையில் இந்த மந்திரத்தை கூறினால் அதிஷ்டம் நிச்சயம் நமது வீடுகளில் பொதுவாக காலையில் எழுந்து தீபம் ஏற்றி இறைவனை வணங்குவது வழக்கம். அதே போல மாலையிலும் தீபம் ஏற்றி இறைவனை வழிபடுவது வழக்கம். நாம் காலையில் தீபம் ஏற்றுகையில் கீழே உள்ள மந்திரம் அதை கூறினான் அது நம்முடைய வழிபாட்டிற்கு மேலும் சிறப்பு சேர்க்கும். இதன் மூலம் நாம் செய்யும் காரியங்கள் அனைத்திலும் நமக்கு வெற்றி கிடைக்க வழிபிறக்கும், அதிஷ்டம் உண்டாகும். தீப மந்திரம்: ஸோயம் பாஸ்கர வித்யஸ்த கிரணோத்கர பாஸ்வா தீப: ஜ்யோதிர் நமஸ்துப்யம் சுப்ரபாதம் குருஷ்வமே. பொருள்: இவ்வுலக மக்களை காத்து, அவர்களுக்கு நல்லறிவை வழங்கக்கூடிய கதிர்களை இவ்வுலகம் முழுக்க பரப்பும் தீபமே. என்னுடைய இந்த நாள் சிறப்பாக இருக்கு உங்களது அருளை வேண்டுகிறேன். தீபம் ஏற்றிய பிறகு இந்த மந்திரத்தை 9 முறை கூறுவது நல்லது. அதே போல இந்த மந்திரத்தை தினமும் கூறி வந்தால் நமது வாழ்வில் பல அறிய மாற்றங்கள் நிகழும். அதை நம்மால் மிக எளிதில் உணர முடியும். நமக்கு சாதகமாக பல விடயங்கள் நடப்பதை நாமே கண்கூடாக பார்க்கலாம். இந்த மந்திரத்தின் சக்தியானது ஒரு நாள் முழுவதும் நமக்கு...

வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரராக சிவன்

Image
  கணவன் மனைவி ஒற்றுமை குழந்தை பாக்கியம் அருளும் வாசுதேவநல்லூர் சிவன் தல வரலாறு:  பிருங்கி மகரிஷி, சிவம் வேறு, சக்தி வேறு என்ற எண்ணத்தில் சிவனை மட்டுமே வணங்கி வந்தார். இது கண்ட பார்வதிதேவி சிவனிடம், "நாம் இருவரும் ஒன்றே என்ற உண்மையை முனிவருக்கு உணர்த்துங்கள்' என்றாள். ஆனால், சிவன் அவளது வேண்டுதலை ஏற்கவில்லை. வருத்தமடைந்த பார்வதி, சிவனைப் பிரிந்து பூலோகம் வந்தாள். ஒரு புளியமரத்தின் அடியில் தவமிருந்தாள். அவளுக்கு காட்சி தந்த சிவன், தன் இடதுபாகத்தில் அவளை ஏற்று அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்தார்.  புளிய மரங்கள் நிறைந்த வனத்தில் சிவன் காட்சி தருவதால், "சிந்தாமணிநாதர்' என்றும் அழைக்கப்படுகிறார். புளிய மரத்திற்கு "சிந்தை மரம்' என்றும் பெயர் உண்டு. இத்தலத்தின் விருட்சமும் புளியமரம் ஆகும். இம்மரத்தின் பழங்கள் இனிப்பு, புளிப்பு என இரட்டைச் சுவையுடன் இருப்பது சிறப்பம்சம்.  இந்த தலம் வாசுதேவநல்லூர் என அழைக்கப்படுகிறது. இப்பகுதியை சிவபக்தனான ரவிவர்மன் ஆண்டு வந்தான். இவனது மகன் குலசேகரன் தீராத நோயால் அவதிப்பட்டான். மகன் குணமடைய சிவனை வேண்டினான் மன்னன்.  ஒருநாள் அவனைச் சந்தித...

Kalabairavashtagam | காலபைரவாஷ்டகம் பார்த்து பாடவும்

Image
 

Patanjali Siddhar History | பதஞ்சலி சித்தர் வரலாறு | 18 Siddhargal

Image
 

ஸ்ரீ மகாலட்சுமி பற்றிய 40 அரிய தகவல்கள்

Image
  ஸ்ரீ மகாலட்சுமி பற்றிய 40 அரிய தகவல்கள் மகாலட்சுமி வில்வ மரத்தில் இருப்பதால் அதை மாதப்பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, திங்கட்கிழமை ஆகிய நாட்களில் வில்வத்தை மரத்திலிருந்து பறிக்கக் கூடாது. 1. மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். சித்தி, புத்தி, போகம், முக்தி தருபவள்.  2. மகாலட்சுமிக்கு ஈஸ்வரி, ஹரண்யமயி, ஹரிணி, சூர்யா, பிங்களா, புஷ்கரிணி, சந்திரா என்ற பெயர்களும் உண்டு.  3. அவளுக்கு பிரியமான பூ செவ்வந்தி எனப்படும் சாமந்திப்பூ.  4. நெல்லிமரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் துவாதசியன்று நெல்லிக்கனியை உணவில் சேர்த்துக் கொண்டால் ஏகாதசி விரதத்தின் பலன் கிடைக்கும்.  5. ஆதி சங்கரருக்கு துவாதசியன்று நெல்லிக்கனி தானம் செய்த பெண்மணிக்கு அவர் கனகதாரா ஸ்தோத் திரம் பாடி பெருஞ்செல்வம் கிடைக்கச் செய்தார். 6. மகாலட்சுமி வில்வ மரத்தில் இருப்பதால் அதை மாதப்பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, திங்கட்கிழமை ஆகிய நாட்களில் வில்வத்தை மரத்திலிருந்து பறிக்கக் கூடாது.  7.பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். இதனால் கோவில்களில் க...

சிவபெருமான் பற்றிய சிறப்பு செய்திகள்

Image
  சிவபெருமான் பற்றிய சிறப்பு செய்திகள்...! சிவபெருமான் ஒவ்வொரு கோவில்களிலும் வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார். பிருங்கி முனிவர் வண்டு வடிவெடுத்து சிவ பெருமானை வழிபட்டதால் சிவ லிங்கத்தில் வண்டு துளைத்த அடையாளம் ஏற்பட்டது.  இந்த அரிய வடிவினை நாம் திருநல்லூரில் காணலாம். இங்கு இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் என்ற திரு நாமத்துடன் அருள்பாலிக்கிறார். ரத்தினம் வேண்டிய ஒரு அரசனை இறைவன் சோதித்தபோது அவனுடைய வாளால் வெட்டப்பட்ட லிங்கத் திருமேனியை ரத்தினகிரியில் காணலாம். இங்கு சிவபெருமான் ரத்தினகிரீஸ்வரர் என்றபெயருடன் காட்சி தருகிறார்.  தலைச்சங்காட்டில் திருமால், சிவபெருமானை வழிபட்டு, பாஞ்சஜன்ய சங்கைப் பெற்றதால் அங்கு சங்கு வடிவில் மூலவராகக் காட்சியளிக்கிறார் ஈசன். இறைவனுடைய பெயர் சங்காரண்யேஸ்வரர். கேரள மாநிலம் திருச்சூரில் வடக்குநாதர் சுவாமி கோயிலில் சிவன் நெய் மலையாக காட்சி தருகிறார். ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த லிங்கம் இது. அமர்நாத்தில் உள்ள பனிலிங்கம் சந்திரனைப்போலவே 15 நாளில் வளர்ந்து பௌர்ணமியில் முழு லிங்கமாகவும் அடுத்த 15 நாளில் தேய்ந்து அமாவாசையில் மறைவதும் சிறப...