Posts

நடராஜர் தன்னுடைய நடனத்தால் சிறப்பித்த ஐந்து திருத்தலங்கள்.

Image
  நடராஜர் தன்னுடைய நடனத்தால் சிறப்பித்த ஐந்து திருத்தலங்கள்.                 பஞ்ச சபைகள்’*என்றும், ‘ஐம்பெரும் சபைகள்’ என்றும் அழைக்கப்படுகின்றன.     1) சிதம்பரம், 2) மதுரை, 3) திருவாலங்காடு, 4) திருநெல்வேலி,  5) குற்றாலம், ஆகிய இந்த ஐந்து திருத்தலங்களும், முறையே பொற்சபை, வெள்ளிசபை, ரத்தின சபை, தாமிர சபை, சித்திர சபை, என்று வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.   மேற்கண்ட ஐந்து சபைகள் உள்ள திருத்தலங்களை சிறிய குறிப்பாக பார்க்கலாம்:-)               *வெள்ளி சபை   சிவபெருமானின் திருவிளையாடல்கள் பெரும்பாலும் நடைபெற்ற இடமாக மதுரை திருத்தலம் திகழ்கிறது.  மீனாட்சி அம்மனின் அரசாட்சியும், அருளாட்சியும் நிறைந்திருக்கும் மதுரையில்தான் மதுரை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த ஆலயம்தான் நடராஜரின் திருநடனம் கண்ட ‘வெள்ளி சபை’யாக திகழ்கிறது.  இதனை ‘வெள்ளியம்பலம்’, ‘வெள்ளி மன்றம்’ என்றும் அழைப்பார்கள். இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் நடராஜப் பெருமான், தன் பக்தனான பாண்டிய மன்னன...

சுப்பிரமணியசுவாமி, திருக்கோவில் குமாரவயலூர்,

Image
 அருள்மிகு வள்ளி தேவசேனா, ஆதிநாயகி சமேத சுப்பிரமணியசுவாமி, ஆதிநாதர் திருக்கோவில் குமாரவயலூர், திருச்சி மாவட்டம். சோழ வம்சத்தின் ஒரு மன்னன் நீண்ட நேரம் வேட்டையாடி தண்ணீரைத் தேடி இந்த இடத்திற்கு வந்ததாக புராணம் கூறுகிறது. கரும்பைக் கவனித்த சோழ மன்னன் அதிலிருந்து சாற்றைக் குடிக்க நினைத்தான். கரும்பை உடைக்க முயன்றபோது, ​​அதில் இருந்து ரத்தம் கசிவதைக் கண்டு மன்னன் திகைத்தான். இந்த மர்மமான சூழ்நிலையைப் பற்றி மேலும் அறிய முயற்சித்தபோது, ​​​​அவர் பூமியைத் தோண்டச் சென்று ஒரு சிவலிங்கத்தை (சிவலிங்கம்) கண்டார். ஆச்சரியத்துடன், சோழ மன்னன் அந்த இடத்திலேயே கோயில் கட்ட முடிவு செய்தார். இந்து புராணங்களின்படி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இருந்து புனித அருணகிரிநாதரை (15 ஆம் நூற்றாண்டின் தமிழ்க் கவிஞர் துறவி) முருகப்பெருமான் காப்பாற்றிய பிறகு, அவர் திருப்புகழ் முதல் சில பாடல்களான ' முத்தை தரு ' துறவிக்கு பரிசளித்தார். இந்த சில வசனங்களை இயற்றிய பிறகு, துறவி கவிஞர் மீண்டும் தியானத்தில் இறங்குகிறார். முருகப் பெருமான் அவரை வயலூருக்கு வரவழைத்து, திருப்புகழ் பாடுவார் என்று எதிர்பார்த்தார். துறவி...

ஆஞ்சநேயர் சூட்சும வடிவில் வீணை இசைக்கும் சிவாலயம்!

Image
  ஆஞ்சநேயர் சூட்சும வடிவில் வீணை இசைக்கும் சிவாலயம்! சென்னை பூந்தமல்லி - பேரம்பாக்கம் சாலையில், பூந்தமல்லியில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில். வீணை வாசிக்கும் ஆஞ்சநேயர், எலும்புப் பிணிகள் தீர்க்கும் பிரதோஷ தரிசனம், மூல நட்சத்திரக் காரர்கள் வழிபடவேண்டிய ஆலயம் என்று இந்தத் தலத்துக்கு சிறப்புகள் பல உண்டு. திருமால் மோகினி அவதாரம் எடுத்து வந்து அசுரர்களை மயக்கி, பாற்கடல் அமிர்தத்தைத் தேவர்களே அருந்தும்படி செய்த கதையை நாம் அறிவோம். இங்ஙனம் வஞ்சகமாக அசுரர்களை ஏமாற்றியதால், மோகினி வடிவத்தில் இருந்து தன் சுயவடிவுக்கு மாற மகாவிஷ்ணுவால் முடியவில்லை. எனவே, அவர் இத்தலத்துக்கு வந்து, சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டு, அதன் பயனாக சுய வடிவம் பெற்றார். `மால் பேடு' என்றும் (மால் திருமால்; பேடு பெண்), பெண் வடிவில் திருமால் வழிபட்டு, மெய் உருக் கொண்டதால் `மெய்ப்பேடு' என்றும் அழைக்கப்பெற்ற இத்தலம், தற்போது `மப்பேடு' என்று அழைக்கப்படுகிறது. திருவாலங்காட்டில் எம்பெருமான் ஈசன் திருநடனம் புரிந்த போது, அவரின் நந்தி கணங்களில் ஒருவரான சிங்கி, சிவனார...

Hayagrevar | ஹயக்ரீவர்

Image
 

மகாலட்சுமி வசிக்கும் 108 அபூர்வ இடங்கள்

Image
  மகாலட்சுமி வசிக்கும் 108 அபூர்வ இடங்கள் சித்த நூல்களில் மகாலட்சுமி வாசம் செய்யும் அபூர்வ 108 இடங்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளன. நாம் தொடர்ந்து இந்த பொருட்களை வைத்திருப்பதாலோ, அன்றாட நம் வாழ்வில் பயன்படுத்துவதாலோ, தொடுவதலோ அதிஷ்டத்துக்குரிய தேவதைகள், அதிஷ்டத்துக்குரிய சக்திகள் நம்மை ஈர்க்கும் என வேத நூல்கள் சொல்கின்றன. (1)வெற்றிலை மேற்புறம், (2)விபூதி, (3)வில்வம், (4)மஞ்சள், (5)அட்சதை, (6)பூரணகும்பம், (7)தாமரை, (8)தாமரைமணி, (9)ஜெபமாலை, (10)வலம்புரிச்சங்கு, (11)மாவிலை, (12)தர்ப்பை, (13)குலை வாழை, (14)துளசி, (15)தாழம்பூ, (16)ருத்ராட்சம், (17)சந்தனம், (18)தேவ தாரு, (19)அகில், (20)பஞ்சபாத்திரம், (21)கொப்பரைக்காய், (22)பாக்கு, (23)பச்சைக்கற்பூரம், (24)கலசம், (25)சிருக்சுருவம், (26)கமண்டலநீர், (27)நிறைகுடம், (28)காய்ச்சிய பால், (29)காராம்பசு நெய், (30)குங்கிலியப் புகை, (31)கஸ்தூரி, (32)புனுகு, (33)பூணூல், (34)சாளக்கிராமம், (35)பாணலிங்கம், (36)பஞ்ச கவ்யம், (37)திருமாங்கல்யம், (38)கிரீடம், (39)பூலாங்கிழங்கு, (40)ஆலவிழுது, (41)தேங்காய்க்கண், (42)தென்னம் பாளை, (43)சங்கு புஷ்பம், (44)இலந்தை, (4...

சுவாமி ஐயப்பன் வரலாறு பாகம் 11 AYAPPAN HISTORY PART - 11

Image
 சுவாமி ஐயப்பன் வரலாறு 11 *****************  மணிகண்டன் வருகை தருதல் :   ***************** மணிகண்டன் தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்பதை அறிந்த அடுத்த கணப் பொழுதே, தாய் இருந்த அறையை நோக்கி விரைந்து வந்து அவர்களுக்கு நடக்கும் சிகிச்சையை கண்டுக்கொண்டிருந்தார். பின், அறையின் வெளியே தந்தை மிகுந்த கவலை யுடன் இருப்பதை அறிந்த மணிகண்டன் அவர் அருகில் சென்றார்.  மணிகண்டனும், மகாராஜாவும் ஒன்றிணை ந்த அப்பொழுதே இச்செயலை எடுத்துரைக்க சரியானதாக அமையும் என்று முதலமைச்சர் வைத்தியரிடம் சில செய்கைகளை காட்ட வைத்தியரும் அங்கு கூடி நின்ற மூவருடன் சென்று மகாராணியின் உடல் நிலைகளைப் பற்றி எடுத்துரைக்க தொடங்கினார்.  வைத்தியர் எடுத்துரைத்தல் :  ***************** வைத்தியர் ஒருவரிடம் சென்று மகாராணிக்கு ஏற்பட்டுள்ள தலைவலி என்பது சாதாரண தலைவலி அல்ல. மிகவும் கடுமையான உயி ரைக்கொல்லும் வகையிலான தலைவலியா கும். இவ்விதமே விட்டுவிட்டால் மகாராணி விரைவில் நம்மைவிட்டு மறைந்து விடுவார் என்று கூறினார். இதைக் கேட்டதும் மகாராஜா என்ன செய்வது? என்று புரியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தார். ஆன...